sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரூ.1.50 கோடி பெறலாம்

/

ரூ.1.50 கோடி பெறலாம்

ரூ.1.50 கோடி பெறலாம்

ரூ.1.50 கோடி பெறலாம்


ADDED : அக் 09, 2025 11:08 PM

Google News

ADDED : அக் 09, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளாண் விளைப் பொருட்களை மதிப்பு கூட்டும் அலகுகளைஉருவாக்குவதன் மூலம் பதப்படுத்துவோர், நுகர்வோருடன் சந்தைஇணைப்புகள் மேம்படுத்தப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள்லாபகரமான விலை பெறுவது உறுதி செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ்புதிய தொழில் முனைவோருக்கு நிதி ரூ.10 கோடி வரை வங்கி கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய மதிப்பு கூட்டும் அலகுகளை நிறுவுவதற்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதம், பின்தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்கும் பெண்கள்,ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என அதிக பட்சமாக ரூ. 1 கோடியே 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த தொகையானது வேளாண் தொழில் முனைவோருக்குமுறையே 60, 40 சதவீதம் என இரு தவணைகளில் தொழில்முனைவோரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இது தவிர வங்கிகடனுக்கான 5 சதவீதம் வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்ட வேளாண் வணிகம் துணை இயக்குநர்கோபாலகிருஷ்ணன் கூறுகையில், திட்ட செலவு இயந்திரங்கள்,கட்டடங்களை உள்ளடக்கியது. மத்திய அரசின் கடன் உத்தரவாததிட்டத்தில் ரூ.2 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.மீதமுள்ள தொகைக்கு வங்கிகள் கோரியபடி ஈட்டுறுதி வழங்கவேண்டும்.

விண்ணப்பதாரருக்கு நிறுவனத்தின் உரிமை இருக்கவேண்டும். கூட்டாண்மை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,கூட்டுறவு நிறுவனமாக இருக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு வேளாண்விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநர் அலுவலகத்தைதொடர்பு கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us