ADDED : ஜூலை 01, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பெருவயல் கரைமேல் குடியிருப்பைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சரவணன் 23. இவர் நேற்று தேவிபட்டினம் பகுதியில் இருந்து, ராமநாதபுரத்திற்கு டூவீலரில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை புறப்பட்டார்.
கோப்பேரிமடம் அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சரவணன் காயமடைந்து ராமநாதபுரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார். தேவிபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.