/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
கோவில் படியில் இருந்து விழுந்த பார்வையற்றவர் பலி
/
கோவில் படியில் இருந்து விழுந்த பார்வையற்றவர் பலி
ADDED : மே 28, 2024 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 36, பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த படியில் ஏறும் போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.