ADDED : ஆக 03, 2024 09:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 67; இவரது நிலம், திண்டிவனம் - நகரி ரயில் திட்டத்திற்காக கையகப் படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடாக, 6.27 லட்சம் ரூபாயை அரசு வழங்கியது.
இதற்காக அவர் சமர்ப்பித்த உண்மை ஆவணத்தை திருப்பித்தர, ராணிப்பேட்டையை சேர்ந்த திண்டிவனம் - நகரி புதிய ரயில்வே நிலம் கையகப்படுத்துதல் தாசில்தார் மதிவாணன் லஞ்சம் கேட்டார். கடந்த, 31ல், 4,000 ரூபாயை லஞ்சமாக பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை 'சஸ்பெண்ட்' செய்து, ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.