/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
நிலத்தகராறு 7 பேர் மீது வழக்கு
/
நிலத்தகராறு 7 பேர் மீது வழக்கு
ADDED : மே 28, 2024 09:58 PM
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி 65. இவரது குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன், 35 என்பவர் குடும்பத்திற்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் இரு தரப்பினரும் கத்தி, உருட்டு கட்டைகளால் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் அரக்கோணம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
அதன்படி பெரியசாமி, அஜித், 25, ரஞ்சித்குமார், 19, ராஜேஷ், 22, சரவணன், 35, சக்கரவர்த்தி, 29, குமார் , 45 உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.