/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பல குற்றங்களில் தொடர்புடையவர் வெட்டிக்கொலை
/
பல குற்றங்களில் தொடர்புடையவர் வெட்டிக்கொலை
ADDED : மார் 09, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 48. இவர் மீது, மணல் கடத்தல், கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
நேற்று காலை, 7:00 மணிக்கு, தன் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்த சீனிவாசனை, அடையாளம் தெரியாத கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர். படுகொலையான சீனிவாசனுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மகள் உள்ளனர்.