ADDED : ஜூலை 08, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்,:புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் கமல்சந்த் வஜவாத், 66. இவர், சென்னையில் இருந்து ஏலகிரிக்கு சுற்றுலா பயணமாக, பெங்களூரு அதிவிரைவு ரயிலில், நேற்று முன்தினம் உறவினர்களுடன் சென்றார்.
ரயில், திருவள்ளூரை கடந்தபோது கழிப்பறைக்கு சென்ற கமல்சந்த் வஜவாத், வழுக்கி விழுந்துள்ளார். உறவினர்கள், அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரயில், அரக்கோணம் ரயில் நிலையம் வந்ததும், அங்கிருந்த மருத்துவர் பரிசோதித்ததில், அவர் இறந்தது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.