/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
அந்தரத்தில் ஊசலாடும் ஜன்னல் பீதியில் பள்ளி மாணவர்கள்
/
அந்தரத்தில் ஊசலாடும் ஜன்னல் பீதியில் பள்ளி மாணவர்கள்
அந்தரத்தில் ஊசலாடும் ஜன்னல் பீதியில் பள்ளி மாணவர்கள்
அந்தரத்தில் ஊசலாடும் ஜன்னல் பீதியில் பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூலை 27, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமால்பூர்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், திருமால்பூர் கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.
மாணவர்களின் நலன் கருதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வகம் மற்றும் வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதில், இரண்டாவது மாடி கட்டடத்தின் ஜன்னல் கதவுகள் உடைந்து, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த கதவுகள் மாணவ - -மாணவியர் மீது விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.