/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சிறுமியிடம் சில்மிஷம் சிக்கினார் பாதிரியார்
/
சிறுமியிடம் சில்மிஷம் சிக்கினார் பாதிரியார்
ADDED : மே 10, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை, ஏரி தெருவில் சர்ச் நடத்தி வருபவர் பாதிரியார் ரகுராஜ்குமார், 54. கடந்த ஆண்டு டிசம்பரில் சர்ச்சுக்கு வந்த, 14 வயது சிறுமியிடம், அவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், 'இதை யாரிடமும் சொல்லக்கூடாது' என, சிறுமியை மிரட்டினார். பின் வீட்டிற்கு சென்ற சிறுமி, சோர்வாக இருந்ததை பார்த்து தாய் விசாரித்துள்ளார்.
சிறுமி நடந்ததை கூறினார். இது குறித்து சிறுமியின் தாய், போலீசில் புகார் செய்தார்.
ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், பாதிரியார் தலைமறைவானார். நேற்று முன்தினம் இரவு, பாதிரியார் ரகுராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.