/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
வெயிலில் மயங்கி விழுந்த முதியவர் பலி
/
வெயிலில் மயங்கி விழுந்த முதியவர் பலி
ADDED : மே 07, 2024 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா குருவராஜபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன், 67. இவர் நேற்று மதியம் திருத்தணி நகருக்கு வந்தார். அங்கு ம.பொ.சி.சாலை ஓரமாக நடந்து சென்றார்.
அப்போது வெயில் கொளுத்தியதில் திடீரென எல்லப்பன் மயங்கி சாலையோரம் விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், எல்லப்பன் இறந்துவிட்டார் என தெரிவித்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

