sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

திருட முயன்ற வாலிபரை தாக்கியதில் உயிரிழப்பு

/

திருட முயன்ற வாலிபரை தாக்கியதில் உயிரிழப்பு

திருட முயன்ற வாலிபரை தாக்கியதில் உயிரிழப்பு

திருட முயன்ற வாலிபரை தாக்கியதில் உயிரிழப்பு


ADDED : அக் 19, 2024 07:26 PM

Google News

ADDED : அக் 19, 2024 07:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வரமங்கலம் தென்றல் நகரில் நேற்று அதிகாலை மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றார்.

அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து மர்மநபரை பிடித்தனர். வீட்டிலிருந்த பெண்கள் கூச்சலிட்ட சத்தம் கேட்டு வீட்டருகே இருந்த மக்கள் ஒன்று கூடி திருட முயன்ற நபரை சரமாரியாக தாக்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தக்கோலம் போலீசார் வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தக்கோலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தில் இறந்த வாலிபர் அரக்கோணம் அடுத்த அரிகிலபாடியை சேர்ந்த மூர்த்தி மகன் மாதேஷ்வரன் 22 என்பதும், இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பாக தக்கோலம் போலீசார் வேதாச்சலம், 61 மற்றும் அவரது மகன் உதயகுமார், 33 ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us