sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

சாப்பிட்டு ஓய்வெடுத்த தொழிலாளி மீது ரோடு ரோலர் ஏறியதில் நசுங்கி பலி

/

சாப்பிட்டு ஓய்வெடுத்த தொழிலாளி மீது ரோடு ரோலர் ஏறியதில் நசுங்கி பலி

சாப்பிட்டு ஓய்வெடுத்த தொழிலாளி மீது ரோடு ரோலர் ஏறியதில் நசுங்கி பலி

சாப்பிட்டு ஓய்வெடுத்த தொழிலாளி மீது ரோடு ரோலர் ஏறியதில் நசுங்கி பலி


ADDED : ஜூலை 06, 2024 05:23 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 05:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அருகே, சாப்பிட்டு ஓய்வெடுத்த தொழிலாளி மீது, ரோடு ரோலர் ஏறியதில் நசுங்கி பலியானார்.

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, ஆந்திர மாநிலம் வழியாக கர்நாடக மாநிலம் ஒசக்கோட்டை வரை, விரைவுச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவாரம் வழியாக இச்சாலை செல்வதால், இப்பகுதியில் பல்வேறு இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பாணாவரம் அடுத்த ரங்காபுரம் அருகே விரைவு சாலை பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பிரதேச மாநிலம், ஆனந்த் நகரை சேர்ந்த ராஜாநாயக், 25, என்பவர் நேற்று காலை சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வுவெடுக்க ரோடு ரோலர் முன் அமர்ந்துள்ளார்.

இதை கவனிக்காமல் மண்ணை சமன்படுத்துவதற்காக, டெல்லி சோனி மர்ம போஸ்ட் தானரசம் பகுதியை சேர்ந்த பைரவா சவுத்ரி, ரோடு ரோலரை இயக்கினார். அப்போது அங்கு அமர்ந்திருந்த ராஜாநாயக் மீது ரோடு ரோலர் ஏறி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பானாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us