/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து மோசடி
/
வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து மோசடி
ADDED : பிப் 02, 2024 01:00 AM
ஆற்காடு:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விலாரி கிராமத்தைச் சேர்ந்தவர் நமசிவாயம், 56; ஆற்காடு கோட்ட நெடுஞ்சாலை அலுவலகத்தில் சாலை பணியாளர். ஆற்காட்டிலுள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.,மில், 24,000 ரூபாய் எடுத்தார். தொடர்ந்து, மினி ஸ்டேட்மென்ட் பெற, மீண்டும் ஏ.டி.எம்., கார்டை மெஷினில் சொருகினார்; ஸ்டேட்மென்ட் வரவில்லை.
அப்போது அங்கிருந்த ஒருவர், அவருக்கு உதவுவது போல நடித்து, வேறு ஏ.டி.எம்., கார்டை கொடுத்துவிட்டு, நமசிவாயத்தின் கார்டுடன் அங்கிருந்து நழுவினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவரது வங்கி கணக்கிலிருந்து, கிருஷ்ணகிரியிலுள்ள ஏ.டி.எம்.,மில் 56,000 ரூபாய் எடுக்கப்பட்டது தெரிந்தது.

