/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பராமரிப்பு பணிகள் காரணமாக சோளிங்கர் ரோப்கார் சேவை ரத்து
/
பராமரிப்பு பணிகள் காரணமாக சோளிங்கர் ரோப்கார் சேவை ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக சோளிங்கர் ரோப்கார் சேவை ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக சோளிங்கர் ரோப்கார் சேவை ரத்து
ADDED : டிச 12, 2024 11:42 PM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது அமிர்தவல்லி தாயார் உடனுறை யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். இந்த கோவிலின் எதிரே சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.
யோக நரசிம்ம சுவாமி அருள்பாலிக்கும் பெரிய மலைக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை அமைந்துள்ளது. மலையேறி சுவாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, கடந்த மார்ச் மாதம், பக்தர்களின் பங்களிப்புடன், இங்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது.
நபர் ஒருவருக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினசரி, 1,000க்கும் மேற்பட்டோர் இந்த ரோப்கார் வாயிலாக பயணித்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். காலை 9:30 மணி முதல், மாலை 4:00 மணி வரை ரோப்கார் சேவை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை ரோப்கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், படி வழியாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வழக்கம் போல சுவாமி தரிசனம் செய்ய முடியும்.

