/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கர் ரோப்கார் சேவை நான்கு நாட்களுக்கு நிறுத்தம்
/
சோளிங்கர் ரோப்கார் சேவை நான்கு நாட்களுக்கு நிறுத்தம்
சோளிங்கர் ரோப்கார் சேவை நான்கு நாட்களுக்கு நிறுத்தம்
சோளிங்கர் ரோப்கார் சேவை நான்கு நாட்களுக்கு நிறுத்தம்
ADDED : ஏப் 17, 2025 09:25 PM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமிர்தவல்லி தாயார் உடனுறை யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் எதிரே சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.
யோக நரசிம்ம சுவாமி அருள்பாலிக்கும் பெரிய மலைக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை அமைந்துள்ளது. மலையேறி சுவாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், கடந்தாண்டு பக்தர்களின் பங்களிப்புடன், ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. நபர் ஒருவருக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ரோப்கார் வாயிலாக தினமும், 1,000 பேர் வரை மலைக்கோவிலுக்கு பயணித்து வருகின்றனர். இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் 21ம் - 24ம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரோப்கார் சேவை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நாட்களில், படி வழியாக மலைக்கோவிலுக்கு சென்று, வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்யலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

