ADDED : நவ 05, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜா: சாலை விபத்தில் கரூரை சேர்ந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி, 50; டிரைவர். இவர் நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி கர்நாடக பதிவெண் கொண்ட லாரியை ஓட்டி வந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வன்னிவேடு அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், துாக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார், வேலுச்சாமி உடலை மீட்டு, விசாரிக்கின்றனர்.

