sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

நரிக்குறவர்கள் மறியலால் வனத்துறையினர் 'எஸ்கேப்'

/

நரிக்குறவர்கள் மறியலால் வனத்துறையினர் 'எஸ்கேப்'

நரிக்குறவர்கள் மறியலால் வனத்துறையினர் 'எஸ்கேப்'

நரிக்குறவர்கள் மறியலால் வனத்துறையினர் 'எஸ்கேப்'


ADDED : ஜூலை 26, 2025 08:23 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திமிரி : நரிக்குறவர்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறையினரை கண்டித்து மறியல் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில், 80 நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் உணவுக்காக வயல் வெளிகளில் பறவைகள், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடுகின்றனர். கடந்த வாரம் முயல் வேட்டையாடியதற்காக, 35,000 ரூபாய் அபராதம் விதித்து, திமிரி வனத்துறையினர் வசூலித்தனர்.

நேற்று வனத்துறையினர் சாதாரண உடையில் முயல், பறவைகளை வாங்குவது போல் நரிக்குறவர்களிடம் விசாரித்தவாறு சென்று, அவர்களிடம் வேட்டையாடப்பட்ட முயல், பறவைகள் இருப்பதை கண்டு, கைது செய்யப்போவதாக மிரட்டினர். ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள், வனத்துறையினரை கண்டித்து திமிரி - கலவை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

திமிரி போலீசார் சென்று, விசாரணை நடத்திக் கொண்டிருந்போது, அங்கிருந்து வனத்துறையினர் 'எஸ்கேப்' ஆகினர். இதையடுத்து, நரிக்குறவர்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர்.






      Dinamalar
      Follow us