sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

கஞ்சா பறிமுதல் நால்வர் கைது

/

கஞ்சா பறிமுதல் நால்வர் கைது

கஞ்சா பறிமுதல் நால்வர் கைது

கஞ்சா பறிமுதல் நால்வர் கைது


ADDED : பிப் 09, 2025 09:17 PM

Google News

ADDED : பிப் 09, 2025 09:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்களில், கஞ்சா கடத்துவதாக, அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார், இரண்டு குழுக்களாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள இரட்டை கண் பாலம் அருகே, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் நாயக், 49, மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த கேசவ் பாக், 39, என்பது தெரிய வந்தது. அவர்களிடம் பைகளில் மறைத்து வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல, அரக்கோணம் ரயில் நிலையம் வடக்கு பகுதியில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் கான், 29, மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார், 19, என்பதும் தெரியவந்தது.

அவர்கள், பையில் மறைத்து வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட நால்வரிடம் இருந்து 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us