sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

'தலசீமியா'வுக்கு இலவச சிகிச்சை பீஹார் மாநில அமைச்சர் தகவல்

/

'தலசீமியா'வுக்கு இலவச சிகிச்சை பீஹார் மாநில அமைச்சர் தகவல்

'தலசீமியா'வுக்கு இலவச சிகிச்சை பீஹார் மாநில அமைச்சர் தகவல்

'தலசீமியா'வுக்கு இலவச சிகிச்சை பீஹார் மாநில அமைச்சர் தகவல்


ADDED : அக் 06, 2024 01:40 AM

Google News

ADDED : அக் 06, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுதாக்கில் சி.எம்.சி., மருத்துவமனை கிளை உள்ளது. இங்கு வந்த பீஹார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீமங்கள்பாண்டே மற்றும் சி.எம்.சி., இயக்குனர் விக்ரம் மேத்யூஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

பீஹாரில், 'தலசீமியா' நோய் பாதித்தோரை கண்டறிய, இலவச சிறப்பு முகாம் அமைத்து சோதனை நடந்தது; முதற்கட்டமாக, 3,000 பேரை பாதித்தது கண்டறியப்பட்டது. இதில், 52 பேருக்கு, 'ஹீமடோபயோடிக்' மற்றும் ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டது.

நபர் ஒருவருக்கு, தலா 15 லட்சம் ரூபாய் செலவை, பீஹார் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. நோயாளிகளை விமானம் மூலம் அழைத்து வந்து, ராணிப்பேட்டை சி.எம்.சி., கிளை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

இதற்கான முதற்கட்ட தவணை 3 கோடி ரூபாயை, சி.எம்.சி., மருத்துவமனைக்கு அரசு செலுத்தியுள்ளது. மேலும், 194 பேருக்கு, 'ஸ்டெம் செல்' மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us