/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: சிறுமி பலி
/
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: சிறுமி பலி
ADDED : ஏப் 22, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணிச்சத்திரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், வேலுாரிலிருந்து சென்னையை நோக்கி சென்ற லாரி, திடீரென பிரேக் அடித்தது.
இதில், பின்னால் வந்த ஆட்டோ, மற்றொரு லாரி மற்றும் கார் என அடுத்தடுத்து, 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில், சென்னையை சேர்ந்த கார்த்திக், 40, தன் குடும்பத்துடன் வேலுார் சென்றுவிட்டு, ஆட்டோவில் சென்னை திரும்பினார். அப்போது இந்த விபத்தில் சிக்கி அவரது மகள் நிஜிதா, 9 பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.