sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

சோளிங்கர் பெருமாள் கோவிலில் கார்த்திகை வெள்ளி உற்சவம்

/

சோளிங்கர் பெருமாள் கோவிலில் கார்த்திகை வெள்ளி உற்சவம்

சோளிங்கர் பெருமாள் கோவிலில் கார்த்திகை வெள்ளி உற்சவம்

சோளிங்கர் பெருமாள் கோவிலில் கார்த்திகை வெள்ளி உற்சவம்


ADDED : நவ 22, 2024 08:32 PM

Google News

ADDED : நவ 22, 2024 08:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். நரசிம்ம சுவாமி யோக நிலையில் இங்கு அருள்பாலித்து வருகிறார். யோக நிலையில் உள்ள சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களின் வேண்டுதலை, அனுமன் கேட்டு நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.

தவ நிலையில் உள்ள யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து அருள்பாலிக்கிறார்.

இதனால், கார்த்திகை மாதத்தில் வாரம்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.

கடந்த 17 ம் தேதி துவங்கிய கார்த்திகை உற்சவத்தில் நேற்று வெள்ளிக்கிழமையை ஒட்டி சிறப்பு உற்சவம் நடந்தது.

மலைக்கோவில் மற்றும் உற்சவர் அருள்பாலிக்கும் பக்தோசித பெருமாள் கோவிலிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு பக்தோசித பெருமாள், உள்புறப்பாடு எழுந்தருளினார்.






      Dinamalar
      Follow us