sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

கார்கள் நேருக்குநேர் மோதல் தகராறில் ஒருவர் உயிரிழப்பு

/

கார்கள் நேருக்குநேர் மோதல் தகராறில் ஒருவர் உயிரிழப்பு

கார்கள் நேருக்குநேர் மோதல் தகராறில் ஒருவர் உயிரிழப்பு

கார்கள் நேருக்குநேர் மோதல் தகராறில் ஒருவர் உயிரிழப்பு


ADDED : நவ 07, 2024 01:18 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 47; லாரி டிரைவர். இவர் மனைவி பூங்கொடிக்கு, நேற்று முன்தினம் இரவு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, ராஜ்குமார் தன் இரு மகன்களுடன், பூங்கொடியை சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றார்.

வேடல் - காந்திநகர் அருகே வந்த போது, எதிரே வந்த கார் மீது மோதியது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டது. இதில், ராஜ்குமார் தாக்கப்பட்டார்.

இதில் மயங்கி விழுந்தவரை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு, ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை பாராஞ்சியில், அரக்கோணம் -- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, தகராறில் ஈடுபட்ட வேடல், காந்தி நகரைச் சேர்ந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், காலை 6:00 - 10:00 மணி வரை, நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us