/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ரூ.46 லட்சம் முறைகேடு; கூட்டுறவு சங்க செயலர் கைது
/
ரூ.46 லட்சம் முறைகேடு; கூட்டுறவு சங்க செயலர் கைது
ADDED : ஆக 22, 2024 03:52 AM
ஆற்காடு: ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், 46.31 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளரை, போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கடந்த, 2019 ஏப்., 1 முதல், 2021 மார்ச், 31, வரையிலான சங்க செயல்பாடுகள் குறித்து கடந்த, 2021 ல் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், கூட்டுறவு சங்க தலைவராக இருந்த, அ.தி.மு.க.,வை சேர்ந்த கிருஷ்ணன், 50, செயலாளர் செல்வரசு, 41, ஆகிய இருவரும் சங்கத்தில், வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து, 46.31 லட்சம் ரூபாயை மோசடி செய்து, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு (பால்வளம்) துணை பதிவாளர் அலுவலகம் சார்பில், வேலுார் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் படி போலீசார் விசாரணை நடத்தி, நேற்று முன்தினம் இரவு செயலாளர் செல்வரசுவை கைது செய்தனர். தலைமறைவான தலைவர் கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.