sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

கணக்கில் வராத பணம் பறிமுதல்

/

கணக்கில் வராத பணம் பறிமுதல்

கணக்கில் வராத பணம் பறிமுதல்

கணக்கில் வராத பணம் பறிமுதல்


ADDED : ஆக 07, 2025 03:05 AM

Google News

ADDED : ஆக 07, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆற்காடு:ராணிப்பேட்டை, ஆற்காடு நகராட்சியில், 102 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், ‍அவர்களின் ஒப்பந்த காலம் முடிந்து, மகளிர் சுயஉதவி குழு மூலம், துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு, தினக்கூலியாக 489 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், 370 ரூபாய் மட்டுமே வழங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காத நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

இச்சோதனை, நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்தது. ஆவணங்களை சரிபார்த்ததில், முதற்கட்ட தவணையாக, 370 ரூபாய் வங்கி கணக்கின் மூலம் வழங்கப்பட்டதும், அடுத்த கட்டமாக, மீதமுள்ள, 119 ரூபாயை வங்கி கணக்கு மூலம் வழங்க ஆவணங்கள் தயார் செய்து வைத்திருந்ததும் தெரிந்தது. இந்நிலையில், அங்கு கணக்கில் வராத, 79,500 ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us