sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் மறியல்

/

ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் மறியல்

ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் மறியல்

ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் மறியல்


ADDED : அக் 18, 2024 02:41 AM

Google News

ADDED : அக் 18, 2024 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்பாக்கம் ஊராட்சி தலைவராக இருப்பவர் சுந்தரம், 40. துணை தலைவர் உட்பட 8 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாக்கம் மற்றும் கும்பினிப்பேட்டை பகுதிகளில் கடந்த ஓராண்டாக எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை.

மேலும் ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் வார்டு உறுப்பினர்களை மதிப்பதில்லை என கூறி, நேற்று மாலை 4:00 மணியளவில் அரக்கோணம் -- சோளிங்கர் நெடுஞ்சாலை கும்பினிப்பேட்டையில் மேல்பாக்கம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 6 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்களிடம் பேசி அங்கிருந்த ஊராட்சி அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

பின் அரக்கோணம் பி.டி.ஓ.,வுக்கு தகவல் தெரிவித்தனர். மேல்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த பி.டி.ஓ.,க்கள் ஜோசப் கென்னடி, பாஸ்கர் ஆகியோர் வார்டு உறுப்பினர்களிடம் பேச்சு நடத்தினர்.

திட்ட இயக்குனரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us