sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

ரயிலில் பெண்ணை தாக்கி 10 சவரன் நகை பறிப்பு

/

ரயிலில் பெண்ணை தாக்கி 10 சவரன் நகை பறிப்பு

ரயிலில் பெண்ணை தாக்கி 10 சவரன் நகை பறிப்பு

ரயிலில் பெண்ணை தாக்கி 10 சவரன் நகை பறிப்பு


ADDED : ஜூலை 28, 2025 03:10 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்: செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்துாரை சேர்ந்தவர் திலகம், 47; செங்கல்பட்டில் இருந்து அரக்கோணத்திலுள்ள தாய் வீட்டிற்கு, பயணியர் ரயிலில் நேற்று சென்று கொண்டிருந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் - மேல்பாக்கம் இடையே சிக்னலுக்கு, காலை, ௯:௦௦ மணிக்கு ரயில் நின்றது.

பெட்டியில் திலகம் மட்டுமே இருந்த நிலையில், நோட்டமிட்ட ஒரு வாலிபர், கத்தியை காட்டி மிரட்டி, அவரை தாக்கியுள்ளார். திலகத்துக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. அவர் அணிந்திருந்த, 10 சவரன் நகையை பறித்துக்கொண்டு, அந்த வாலிபர் ஏரிக்கரையில் இறங்கி ஓடியுள்ளார்.

திலகத்தின் சத்தம் கேட்டு ரயிலில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த ஆசாமியை விரட்டினர். ஆனால், ஆசாமி தலைமறைவாகி விட்டார். அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us