/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
கணவன், குழந்தையை கொன்ற பெண்ணுக்கு இரட்டை 'ஆயுள்'
/
கணவன், குழந்தையை கொன்ற பெண்ணுக்கு இரட்டை 'ஆயுள்'
ADDED : நவ 22, 2024 02:08 AM
ராணிப்பேட்டை,:ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடை அடுத்த தாஜ்புராவை சேர்ந்தவர் ராஜா, 32. எலக்ட்ரீஷியனான இவரது காதல் மனைவி தீபிகா, 24, தம்பதியின் 1 வயது மகன் பிரனீஸ்வரன். கடந்த 2019 மே 17ல் கணவன், மகனை காணவில்லை என, ஆற்காடு தாலுகா போலீசில் தீபிகா புகார் செய்தார்.
போலீசார் விசாரணையில், தீபிகாவுக்கும், ராஜாவின் நண்பரான ஜெயராஜ், 29, என்பவருக்கும் முறைகேடான தொடர்பு இருந்தது தெரிந்தது. அதற்கு இடையூறாக இருந்த கணவன், மகனை கொலை செய்து, சாத்துார் ஏரிக்கரையில் புதைத்ததும் தெரிந்தது. ஆற்காடு தாலுகா போலீசார், தீபிகாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார்.
தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.