sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புது வளாகத்தில் போதிய கடைகள் இல்லைபுறக்கணிக்க காய்கறி வியாபாரி முடிவு

/

புது வளாகத்தில் போதிய கடைகள் இல்லைபுறக்கணிக்க காய்கறி வியாபாரி முடிவு

புது வளாகத்தில் போதிய கடைகள் இல்லைபுறக்கணிக்க காய்கறி வியாபாரி முடிவு

புது வளாகத்தில் போதிய கடைகள் இல்லைபுறக்கணிக்க காய்கறி வியாபாரி முடிவு


ADDED : பிப் 23, 2025 01:28 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது வளாகத்தில் போதிய கடைகள் இல்லைபுறக்கணிக்க காய்கறி வியாபாரி முடிவு

ஓமலுார்:போதிய கடைகள் இல்லாததால், புது காய்கறி சந்தை வளாக கடைகளை புறக்கணிப்பதாக, ஓமலுார் வட்டார காய்கறி வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், அங்குள்ள பஸ் ஸ்டாண்டில், 65 லட்சம் ரூபாயில் தினசரி காய்கறி சந்தை வளாகம் கட்டப்பட்டது. அதில், 40 கடைகள் உள்ளன. அதன் அருகே சிறு காலி இடம் உள்ளது. அதை சுற்றி கம்பி வேலி போடப்பட்டுள்ளது. ஆனால், 150க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் உள்ள நிலையில், 40 கடைகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்வதில், காய்கறி வியாபாரி சங்கத்தினருக்கும், டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.

இதுகுறித்து அங்குள்ள ஒரு மண்டபத்தில், ஓமலுார் வட்டார காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் சிவமகேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் போதிய கடைகள் இல்லாததால் புதிதாக கட்டப்பட்ட கடையை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறை

வேற்றப்பட்டது. இதுதொடர்பாக, காய்கறி சந்தை வளாக திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் நேருவிடம், மனு அளித்தனர். அப்போது பெண் வியாபாரிகள் கண்ணீர் விட்டனர். காலி இடத்தில் இடம் வழங்க அறிவுறுத்தப்படும் என, அமைச்சர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us