ADDED : ஜன 17, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேன் - பைக் மோதல் தொழிலாளி சாவு
இடைப்பாடி,:இடைப்பாடி, ஆலச்சம்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 61. பெங்களூருவில் கல் உடைக்கும் கூலி வேலை செய்து வந்தார். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் வந்த அவர், நேற்று முன்தினம், குஞ்சாம்பாளையத்தில் இருந்து வீட்டுக்கு, 'பிளாட்டினா' பைக்கில் வந்துகொண்டிருந்தார். அவரது மகன் முனியப்பன், 32, ஓட்டினார். இரவு, 7:30 மணிக்கு ஆலச்சம்பாளையம் புறவழிச்சாலையில் வந்தபோது, எதிரே வந்த வேன் மோதி, இருவரும் படுகாயம் அடைந்தனர். மாணிக்கம் சம்பவ இடத்தில் இறந்தார். முனியப்பன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.