sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வழுக்கு மரம் ஏறிய பெண்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரிசு

/

வழுக்கு மரம் ஏறிய பெண்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரிசு

வழுக்கு மரம் ஏறிய பெண்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரிசு

வழுக்கு மரம் ஏறிய பெண்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரிசு


ADDED : ஜன 19, 2025 01:37 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்,: பொங்கல் பண்டிகையையொட்டி, ஆத்துார் அருகே கல்பகனுாரில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் நேற்று, 50 அடி உயர வழுக்கு மரத்தில் பெண்கள் ஏறும் போட்டி நடந்தது. மரம் மீது சில்வர் குடம், பண முடிப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் திருமணமான, திருமணமாகாத பெண்கள் என, தனித்

தனியே போட்டி நடந்தது. 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் ஏறினர். அவர்களால் பாதி துாரம் மட்டுமே ஏற முடிந்தது. இருப்பினும் அனைத்து பெண்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

206 பேருக்கு பரிசுபொங்கலையொட்டி, சங்ககிரி யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில், ஓட்டம், கோணிப்பை ஓட்டம், கராத்தே, இசை நாற்காலி, வாலிபால், குண்டு எறிதல், சிலம்பாட்டம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள், வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோவில் அருகே கடந்த, 14, 15ல் நடத்தப்பட்டன. அதில் திரளானோர், திறமையை வெளிப்படுத்தினர். அதில் வெற்றி பெற்ற, 206 பேருக்கு, கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள், நேற்று முன்தினம் பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us