sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மரக்கன்று அகற்றியதால் பிரச்னை தாசில்தாரிடம் தீர்க்க அறிவுரை

/

மரக்கன்று அகற்றியதால் பிரச்னை தாசில்தாரிடம் தீர்க்க அறிவுரை

மரக்கன்று அகற்றியதால் பிரச்னை தாசில்தாரிடம் தீர்க்க அறிவுரை

மரக்கன்று அகற்றியதால் பிரச்னை தாசில்தாரிடம் தீர்க்க அறிவுரை


ADDED : ஜன 23, 2025 01:25 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்கன்று அகற்றியதால் பிரச்னை தாசில்தாரிடம் தீர்க்க அறிவுரை

தாரமங்கலம், :தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டி, மாவு கரடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு நிலம் உள்ளது. அந்த இடத்துக்கு முன்பிருந்த புறம்போக்கு இடத்தை அன்பழகன், தடமாக பயன்படுத்தி வந்தார். அந்த இடத்தில், ராமிரெட்டிபட்டி ஊராட்சி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த டிச., 26ல், 50 புளிய மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனால் பாதை அடைக்கப்பட்டதால், அன்பழகன், கிராம பி.டி.ஓ., சத்தியேந்திரனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து அதிகாரிகள் பேசி வந்த நிலையில், அங்கிருந்த சில மரக்கன்றுகள் அகற்றப்பட்டதாக கூறி, நேற்று இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தாரமங்கலம் போலீசார், நிலம் தொடர்பான பிரச்னை என்பதால் ஓமலுார் தாசில்தாரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us