ADDED : பிப் 22, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு கல்லுாரியில்'கோ - ஆப்' பஜார்
சேலம்:சேலம் அரசு கலைக்கல்லுாரியில் கூட்டுறவு துறை சார்பில், 'கோ-ஆப்' பஜார் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் செண்பகலட்சுமி தொடங்கி வைத்தார். அதில் கூட்டுறவு துறை மாணவர்கள், கேக், ஜிகர்தண்டா, பணியாரம் உள்ளிட்ட உணவு வகைகள், சேலை, பெண்களுக்கு அலங்கார பொருட்கள், சிறுதானிய உணவு உள்பட, 27 'ஸ்டால்கள்' அடங்கிய, 'கோ-ஆப்' பஜார் அமைத்திருந்தனர். மாணவ, மாணவியர் பார்வையிட்டு, பிடித்தமானவற்றை வாங்கினர். துறைத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.