sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வருவாய் கிராம ஊழியர் காத்திருப்பு போராட்டம்

/

வருவாய் கிராம ஊழியர் காத்திருப்பு போராட்டம்

வருவாய் கிராம ஊழியர் காத்திருப்பு போராட்டம்

வருவாய் கிராம ஊழியர் காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 06, 2025 01:24 AM

Google News

ADDED : பிப் 06, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வருவாய் கிராம ஊழியர் காத்திருப்பு போராட்டம்

சேலம்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம், அஸ்தம்பட்டி மைய தாலுகா அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. வட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.

இறந்த கிராம உதவியாளர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குதல்; காலமுறை ஊதியம் அல்லது அரசு ஊழியர் அட்டவணை, 'டி' பிரிவில் இணைத்திட வேண்டும்; இறந்த, ஓய்வு ஊழியர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி பேசினார். வட்ட செயலர் சரவணன், பொருளாளர் இளவேந்தன் உள்பட பலர் பங்கேற்றனர். இத்துடன் சேர்த்து, மாவட்டத்தில் உள்ள, 14 தாலுகா அலுவலத்திலும், கிராம ஊழியர் சங்கத்தினர் மாலை நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us