/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒற்றுமையாக பணிபுரிய தி.மு.க.,வினருக்கு அறிவுரை
/
ஒற்றுமையாக பணிபுரிய தி.மு.க.,வினருக்கு அறிவுரை
ADDED : செப் 02, 2024 02:18 AM
ஓமலுார்: தி.மு.க.,வின், ஓமலுார் கிழக்கு ஒன்றியம், ஓமலுார் நகரம் சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் அதே பகுதியில் நேற்று நடந்தது.
ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில் சேலம் மத்-திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் பேசுகையில், ''லோக்-சபா தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். அடுத்து ஊராட்சி, சட்-டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக பணிபுரிய வேண்டும். அனைத்து ஊராட்சிக-ளையும் கைப்பற்ற வேண்டும்,'' என்றார்.
மாவட்ட கவுன்சிலர் அழகிரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரமேஷ், நகர செயலர் ரவி, தளபதி நற்பணி மன்ற தலைவர் மகேந்திரன், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்-வராணி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் ஓமலுார் தெற்கு ஒன்றிய செயலர் செல்வகுமரன் தலைமையில் பாகல்பட்டியில் பொது உறுப்பினர் கூட்டம் நடந்-தது.