ADDED : மே 25, 2024 02:41 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் மலை கிராமம் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. முட்டல் ஏரி பகுதியில் உள்ள பூங்கா, படகு சவாரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது. கல்வராயன்மலையில் மழை பெய்து வருவதால் ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு அதிகளவில் தண்ணீர் வந்தது. கடந்த, 18ல் நீர்வீழ்ச்சி, ஏரி, பூங்கா மூடப்பட்டு, சுற்றுலா பயணியர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து சீரான நிலையில் நேற்று முதல் சுற்றுலா பயணியர் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதித்தனர். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள், அங்கு குளித்து மகிழ்ந்தனர். அதேநேரம் நேற்று மதியம், 1:00 முதல், 4:00 மணி வரை, ஆத்துார், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
