ADDED : ஜூலை 04, 2024 11:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், வின்சென்ட்டில் உள்ள அரசு கலைக்கல்லுாரி முன், கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ் துறை பேராசிரியர் முத்து நகை தலைமை வகித்தார்.
அதில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 3 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்குதல்; அரசாணை, 56ன் படி பணி நிரந்தரப்படுத்தல்; மகப்பேறு விடுப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.