நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீர்த்தக்குட ஊர்வலம்
இடங்கணசாலை, ஆக. 21-
இடங்கணசாலை நகராட்சி மடத்துார், சதுரப்பாளையத்தில் தீப்பாஞ்சம்மன் கோவில் உள்ளது. அதன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை, 8:30 மணிக்கு ஏராளமான பக்தர்கள் இடைப்பாடி அருகே கல்வடங்கம் ஆற்றில் புனித நீராடினர். பின் குடத்தில் புனித நீரை நிரப்பி சந்தனம், குங்குமம் இட்டு பூமாலை சூடினர். தொடர்ந்து பூசாரி பூஜை செய்ததும், 4 சக்கர வாகனங்களில் மடத்துார் வந்தனர். அங்கிருந்து காலை, 11:30 மணிக்கு, பசு, காளை, குதிரைகள் முன்புறம் செல்ல, தீர்த்தக்குடங்களை சுமந்தபடி, பக்தர்கள் கோவிலை அடைந்தனர். நாளை காலை, 9:45 மணிக்கு மேல், 10:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.