ADDED : ஜன 11, 2025 01:49 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி: கெங்கவல்லியை சேர்ந்த ஏசு மகன் அபி ேஷக், 26. தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்தார். நேற்று இரவு, 7:00 மணிக்கு ஆணையாம்பட்டியில் இருந்து கெங்கவல்லி நோக்கி, 'ஸ்பிளண்டர்' பைக்கில், 15 வயது மாணவருடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெரம்பலுார் மாவட்டம், தொண்டமாந்துறையில் இருந்து, ஆத்துாருக்கு, 'எம் சாண்ட்' மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இதில் மாணவர் குதித்ததால் தப்பினார். அபி ேஷக், லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
கெங்கவல்லி போலீசார், டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.
