/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எம்.பி., நிதியில் நிழற்கூடம்கட்ட பூமி பூஜை
/
எம்.பி., நிதியில் நிழற்கூடம்கட்ட பூமி பூஜை
ADDED : பிப் 12, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.பி., நிதியில் நிழற்கூடம்கட்ட பூமி பூஜை
ஓமலுார்:ஓமலுார் அருகே செம்மாண்டப்பட்டி ஊராட்சி பாலிக்காட்டில், த.மா.கா., தலைவர், ராஜ்யசபா எம்.பி., வாசன், அவரது நிதியில், 10 லட்சம் ரூபாய் செலவில் நிழற்குடை கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் பூமி பூஜை விழா நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்தார். வட்டார தலைவர் சேதுராமன், அபிமன்னன், மக்கள் பங்கேற்றனர்.