ADDED : பிப் 15, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலிபர் மீதுபாய்ந்தது குண்டாஸ்
சேலம்சேலம், குகை, பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்தவர் ஜீவா, 21. இவர், குகையை சேர்ந்த அஜித்குமாரிடம், கடந்த ஜன., 31ல் கத்தியை காட்டி மிரட்டி, 2,200 ரூபாய், மொபைல் போனை பறித்துள்ளார். இதுகுறித்த புகாரில் செவ்வாய்ப்பேட்டை போலீசார், ஜீவாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது ஏற்கனவே வழிப்பறி தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை ஸ்டேஷனில் இரு வழக்குகள், கிச்சிப்பாளையத்தில் ஒரு வழக்கு இருப்பது தெரிந்தது. இதனால் ஜீவாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு, நேற்று உத்தரவிட்டார்.

