ADDED : பிப் 23, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழுகிய நிலையில் டீ மாஸ்டர் சடலம்
மேட்டூர்:மேட்டூர், ஒர்க் ஷாப் கார்னர் அருகே வசிப்பவர் ரேவதி, 40. கணவர் இறந்த நிலையில், காவேரி கிராஸ் முனியப்பன் கோவில் அருகே பேக்கரி நடத்தினார். அங்கு புதுக்கோட்டை, அய்யனார்புரத்தை சேர்ந்த நடராஜன், டீ மாஸ்டராக பணிபுரிந்தார். மேட்டூர், பொங்கியண்ணன் நகரில் வாடகை வீட்டில் தனியே வசித்த அவர், கடந்த, 19 இரவு பணி முடிந்து, 20 காலை வீட்டுக்கு சென்றார். பின், உடல்நிலை சரியில்லை எனக்கூறியுள்ளார். இரு நாட்களாக அவருக்கு போன் செய்தும் எடுக்கவில்லை. நேற்று காலை, அவரது வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது, அழுகிய நிலையில் நடராஜன் சடலமாக கிடந்தார். ரேவதி புகார்படி, மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.