ADDED : மார் 06, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துணை கமிஷனர் பொறுப்பேற்பு
சேலம்:சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிருந்தா, சென்னை அண்ணா பல்கலை வழக்கு தொடர்பான தனி குழுவில் நியமிக்கப்பட்டார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய சிவராமன், பதவி உயர்வில் சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றார். பின் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிடம் வாழ்த்து பெற்றார்.