sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளி மாணவர்களுக்குஇந்தி புத்தகம் வழங்கிய பா.ஜ.,

/

பள்ளி மாணவர்களுக்குஇந்தி புத்தகம் வழங்கிய பா.ஜ.,

பள்ளி மாணவர்களுக்குஇந்தி புத்தகம் வழங்கிய பா.ஜ.,

பள்ளி மாணவர்களுக்குஇந்தி புத்தகம் வழங்கிய பா.ஜ.,


ADDED : மார் 14, 2025 02:00 AM

Google News

ADDED : மார் 14, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி மாணவர்களுக்குஇந்தி புத்தகம் வழங்கிய பா.ஜ.,

பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை ஒட்டி, பா.ஜ., சார்பில், பட்டிமன்றம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.

அதில் மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேசுகையில், ''தமிழகத்தில் தமிழ் கட்டாய மொழியாக இருக்க வேண்டும். இணைப்பு மொழி ஆங்கிலம். மூன்றாவதாக விருப்ப மொழியாக இந்திய மொழிகளில் ஒன்று இருக்கலாம். இதை திரித்து இந்தி எதிர்ப்பு என, ஊரை ஏமாற்றுகின்றனர்,'' என்றார்.

தொடர்ந்து ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கினார். பின் மேடைக்கு அழைத்து வரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு, இந்தி புத்தகம் வழங்கினார்.

சேலம் லோக்சபா தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட செயலர் கந்தசாமி, பொதுச்செயலர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னுராஜ், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஷ்பாபு, வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் வெங்கடாசலம், பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய தலைவர் நிர்மலா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us