sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீர் திட்டம் செயல்படும் பகுதிகளில்மின்தடை இருக்கக்கூடாது: கலெக்டர்

/

குடிநீர் திட்டம் செயல்படும் பகுதிகளில்மின்தடை இருக்கக்கூடாது: கலெக்டர்

குடிநீர் திட்டம் செயல்படும் பகுதிகளில்மின்தடை இருக்கக்கூடாது: கலெக்டர்

குடிநீர் திட்டம் செயல்படும் பகுதிகளில்மின்தடை இருக்கக்கூடாது: கலெக்டர்


ADDED : மார் 18, 2025 01:56 AM

Google News

ADDED : மார் 18, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீர் திட்டம் செயல்படும் பகுதிகளில்மின்தடை இருக்கக்கூடாது: கலெக்டர்

சேலம்:சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து, அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:

கோடைகாலத்தில் சீரான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த, திங்கள்தோறும் அனைத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் தமிழக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும், 11 கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம், 4 நகராட்சி, 29 டவுன் பஞ்சாயத்து, 4,466 ஊரக குடியிருப்பு பகுதிகள் பயன்பெற, தினமும், 193 எம்.எல்.டி., குடிநீர் வழங்கப்படுகிறது. சீராக குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வும் மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில், எந்த மின்தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை மின்வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us