/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உபரிநீர் மண்கரை மதகில் மரங்கள் வெட்டி அகற்றம்
/
உபரிநீர் மண்கரை மதகில் மரங்கள் வெட்டி அகற்றம்
ADDED : மார் 18, 2025 02:08 AM
உபரிநீர் மண்கரை மதகில் மரங்கள் வெட்டி அகற்றம்
மேட்டூர்:மேட்டூர் அணை, 1925 ஜூலை, 20ல் தொடங்கி, 1934 ஆக., 21ல் கட்டி முடிக்கப்பட்டது. அணை நிரம்பிய பின் உபரிநீர், 16 கண் மதகு வழியே வெளியேற்றப்படும். அந்த மதகு வழியே அதிகபட்சம் வினாடிக்கு, 3.56 லட்சம் கனஅடி உபரிநீர் வெளியேற்ற முடியும். அதை விட தண்ணீர் அதிகமாக வந்தால் வினாடிக்கு, 50,400 கனஅடி நீரை வெளியேற்ற, வலதுகரையில் உபரிநீர் வெளியேற்றும் மதகு உள்ளது. அந்த, 248 மீட்டர்(814 அடி) நீளம் கொண்ட மண்ணால் கட்டிய மதகை வெட்டி, உபரிநீர் வெளியேற்றப்படும். ஆனால் இதுவரை மண் கரையை வெட்டி உபரி நீர் வெளியேற்றப்படவில்லை.
தற்போது புதர்கள், கருவேல மரங்கள் வளர்ந்து மண்கரையை மறைத்துள்ளன. கடந்த, 3 நாட்களாக நீர்வளத்துறை ஊழியர்கள் கருவேலமங்களை வெட்டி, புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

