தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அண்ணன் சடலத்துக்கு வழிவிடாததம்பியை கண்டித்து சாலை மறியல்

அண்ணன் சடலத்துக்கு வழிவிடாததம்பியை கண்டித்து சாலை மறியல்

அண்ணன் சடலத்துக்கு வழிவிடாததம்பியை கண்டித்து சாலை மறியல்


ADDED : மார் 27, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணன் சடலத்துக்கு வழிவிடாததம்பியை கண்டித்து சாலை மறியல்

வாழப்பாடி:வாழப்பாடி, நடுப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 85. உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். உடலை, காலை, 11:30 மணிக்கு, ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, இறந்தவரின் தம்பியான சின்னதம்பி, 78, நிலப்பிரச்னை முன்விரோதத்தில், ஆறுமுகம் சடலத்தை கொண்டு செல்ல வழி விட மறுத்தார்.

இதை கண்டித்து ஆறுமுகத்தின் உறவினர்கள், அயோத்தியாப்பட்டணம் - பேளூர் நெடுஞ்சாலையில், சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார் பேச்சு நடத்தியதில், மறியலை கைவிட்டு, ஆறுமுகம் உடலை கொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us