ADDED : பிப் 23, 2025 01:32 AM
அ நிறம் | அளவு
மது விற்ற மூதாட்டி கைது; 41 பாட்டில் பறிமுதல்
ஏற்காடு:ஏற்காடு, கீரைக்காட்டை சேர்ந்த தமீம் மனைவி மலர்கொடி, 66. இவர் வீட்டில், ஏற்காடு போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பின்புறம், விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த, 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, மலர்கொடியை கைது செய்தனர். இவர் ஏற்கனவே, அரசு மதுபாட்டில்களை விற்றதால் பலமுறை கைது செய்யப்பட்டவர் என, போலீசார் தெரிவித்தனர்.
