தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 6 பவுனை பறித்து காரில் தப்பிய கும்பல்

வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 6 பவுனை பறித்து காரில் தப்பிய கும்பல்

வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 6 பவுனை பறித்து காரில் தப்பிய கும்பல்


ADDED : பிப் 06, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 6 பவுனை பறித்து காரில் தப்பிய கும்பல்

சேலம்: சேலம், சின்னதிருப்பதி மாருதி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 78. இவரது மனைவி திலகம், கல்வித்துறை துணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 3 மாதங்க

ளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகன் அருண்கார்த்திக், 43, பெங்களூரில் பணிபுரிகிறார். மகள் பிரசன்ன உதயா, 40, கணவர் இறந்ததால், தந்தை வீட்டில் வசிக்கிறார்.

நேற்று காலை கிருஷ்ணமூர்த்தியும், பிரசன்ன உதயாவும் நடைபயிற்சிக்கு சென்றனர். பயிற்சி முடித்துவிட்டு முதலில், பிரசன்ன உதயா வீட்டுக்கு வந்தார். வீடு திறந்திருந்தது. அவர் உள்ளே சென்றதும், அங்கிருந்த, 3 பேர் பிரசன்ன உதயாவை பிடித்து கட்டிப்போட்டனர்.

தொடர்ந்து வளையல், சங்கிலி என, 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு காரில் தப்பினர். பிரசன்ன உதயா, மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

தொடர்ந்து கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். மோப்ப நாய் ஜூலி மூலம் சோதனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us