ADDED : செப் 11, 2024 07:11 AM
ஓமலுார்: ஓமலுார் அருகே மேல்காமாண்டப்பட்டியை சேர்ந்தவர் குபேந்-திரன், 30. ஆட்டோ டிரைவரான இவர் நேற்று காலை, முத்துநா-யக்கன்பட்டியில் இருந்து, 8 மாணவர்களை ஏற்றிக்கொண்டு, பள்-ளிகளில் இறக்கிவிட ஓமலுார் நோக்கி புறப்பட்டார். பெரமெச்சூர் டாஸ்மாக் கடை அருகே வந்தபோது பள்ளத்தில் இறங்கி ஏறிய ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து, ஒருபுறமாக சாய்ந்து விபத்-துக்குள்ளானது. அங்கிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள், ஓமலுார், கடைவீதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சேர்க்கப்பட்டனர். இதில் இரு சிறுவர்கள் லேசான காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
இதை அறிந்த மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, டிரைவர் அலட்சியத்தால் விபத்துக்குள்ளான ஆட்டோவை பறிமுதல் செய்து வழக்குப்பதிய உத்தரவிட்டார். அதன்படி கோட்டமேட்-டுப்பட்டி வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் அளித்த
புகார்படி, ஓமலுார் போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்து குபேந்திரனிடம் விசா-ரிக்கின்றனர்.