/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் மோதிசாலையோரம் நின்றவியாபாரி பலி
/
பைக் மோதிசாலையோரம் நின்றவியாபாரி பலி
ADDED : ஜன 18, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் மோதிசாலையோரம் நின்றவியாபாரி பலி
தாரமங்கலம்,:தாரமங்கலம் அருகே சேடப்பட்டி காட்டுவளவை சேர்ந்தவர் செல்லம்மாள், 57. இவரது கணவர் சுப்ரமணி, 67. காய்கறி வியாபாரியான இவர், நேற்று காலை, 8:30 மணிக்கு, நங்கவள்ளி சாலையை கடக்க, ஆசிரியர் காலனியில் இடது புறமாக நின்றிருந்தார். அப்போது நங்கவள்ளி பக்கமிருந்து வந்த ஸ்பிளண்டர் பைக் மோதியதில், சுப்ரமணிக்கு தலையில் அடிபட்டது. அவரை மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்துவிட்டார். செல்லம்மாள் புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.